எனக்கு அரசியலே வேண்டாம் : கட்சியை கலைக்கும் தமிழருவி மணியன்..!!
காமராஜர் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு அரசியல் இருந்து விலகுவதாக மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
1966 இல் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் தமிழருவி மணியன்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க முயற்சி செய்போது, தமிழருவி மணியன் அவருடன் இணைந்து பணியாற்றினார். ரஜினி கட்சி துவங்கும் முடிவை கைவிட்டதால், தான் தொடங்கிய காந்திய மக்கள் கட்சியை தனது அரசியல் பயணத்தை அவர் தொடர்ந்தார்.
பின்னர் காமராஜர் மக்கள் கட்சி என பெயர் மாற்றம் செய்தார். இந்த நிலையில், இந்த கட்சியையும் கலைத்துவிட்டு, அரசியல் இருந்து விலகும் முடிவை தமிழருவி மணியன் எடுத்துள்ளார். வரும் டிசம்பர் 20-ம் தேதி தமிழருவி மணியனின் புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
வரும் டிச., 20ஆம் தேதி தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமாகாவுடன் இணைக்க உள்ளதாகவும், அவருடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் வாசன் வலியுறுத்தினால் போட்டியிடுவது குறித்து பரீசிலனை செய்வேன் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.


