திருமாவளவன் விரைவில் பூரண நலம் பெற்றிட பிரார்த்திக்கிறேன் - தினகரன் ட்வீட்!!

 
rg

திருமாவளவன் பூரண நலம் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
 

thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் காய்ச்சலின் காரணமாக இரண்டு நாட்கள் அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் வருகின்ற 30ஆம் தேதி வரை அவரை சந்திக்க நேரில் வர வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

tb

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.