அனைத்திலும் நீதிமன்றம் தலையிடனும்னா, முதல்வரா நீங்க எதுக்கு? உங்க ஆட்சி எதுக்கு? - தவெக தலைவர் விஜய் கேள்வி..!!
திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்களால் உயிரிழந்த 24 இளைஞர்களின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் சாரி சொல்ல வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், “சாரி வேண்டாம்... நீதி வேண்டும்.” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழகத்தில் லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், “ அஜித்குமார் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர். அந்தக் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு முதல்வர் சார்.. நீங்க சாரி சொன்னீங்க.. தப்பில்ல.. ஆனா இதே ஆட்சியில் 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்காங்க.. அவங்க குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்க..

இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாராணம் போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்க.. சாத்தான்குளம் வழக்கில் அன்று ஃபெனிக்ஸ்,ஜெயராக் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அவமானம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.. இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்குத்தான் மாற்றப்பட்டுள்ளது. அதே சிபிஐ, ஆர்.எஸ்.எஸ்- பாஜக கைப்பாவையாக தான் உள்ளது. நீங்கள் ஏன் அங்கே சென்று ஒளிந்துகொள்கிறீர்கள்?
அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரிக்க, ‘நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்’ என்று தவெக வலுவாக கோரிக்கை வைத்திருப்பதால், பயத்தில் மத்திய ஆட்சிக்குப் பின்னாடி ஒளிந்து கொள்கிறீர்கள். சாத்தான்குளம் கொலை அவமானம் என்றால், அஜித்குமர் கொலை அவமானம் இல்லையா? அண்ணா பல்கலைக்கழகம் துவங்கி அஜித்குமார் கொலை வரை அனைத்து வழக்கிலும் நீதிமன்றம் தலையிட்டு உங்கள் அரசை கேள்வி கேட்கிறது. அனைத்தையும் நீதிமன்றம் தான் அனைத்திலும் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டுமானால், பிறகு நீங்கள் கேட்கிறது. அனைத்தையும் நீதிமன்றம் தான் அனைத்திலும் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டுமானால், பிறகு நீங்கள் எதற்கு முதலமைச்சர்? உங்கள் ஆட்சி எதற்கு?
எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடமிருந்து எந்த பதிலும் வராது. அதிகபட்சம் ‘சாரிமா..’ ‘தெரியாமல் நடந்துவிட்டதுமா..’ என்று கூறப்போகிறீர்கள். இது வெற்று விளம்பர மாடல் திமுக அரசு தற்போது சரிமா திமுக அரசாக மாறிவிட்டது.
இப்படி இருக்கும் இந்த திறனற்ற அரசு அது செல்வதற்கு முன்னால் அதை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் மக்களோடு மக்களாக நின்று உங்களை சரிசெய்ய வைப்போம். தவெக சார்பாக அதற்கான போராட்டங்கள் நடத்தப்படும்..” என்று தெரிவித்தார்.


