பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓபிஎஸ் வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா? ஜெயக்குமார் பதில்

 
jayakumar

சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயார் என்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயார். ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

jayakumar

பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடுவோம்; கடைசி வரை போராடுவோம்  என்றார். பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்விக்கு, சூழலை பொறுத்து முடிவெடுப்போம் என்றார்.