திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்!

 
red alert

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அந்த மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும்  தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும்  பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

rain

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.