டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது - பாலச்சந்திரன் பேட்டி!

 
Balachandran

சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 780 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 
 
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிச.3 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பிருக்கிறது. டிச.4ம் தேதி மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில், சென்னைக்கும் மசிலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. 

rain

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: டிசம்பர் 3ம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 780 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.  டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.