புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை - அமைச்சர் தகவல்

 
Muthusamy

டாஸ்மாக்கில் 2 மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Tasmac

தமிழ்நாட்டில் 5329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் 500 கடைகள் மூடப்பட்டன. பூரண மதுவிலக்கை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசுக்கு வருவாய் அதிகரித்து வரும் நிலையில்  நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.

muthusamy

இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசிய அவர்,  "ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் ரூ.16.67 கோடி மதிப்பிலான பணிகளை இன்று துவங்கி வைக்க உள்ளோம்; டாஸ்மாக்கில் 2 மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்; 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை; பள்ளி, கோயில் மற்றும் மக்களின் புகாரின் அடிப்படையில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர புதிய கடைகள் திறக்கவில்லை" என்றார்.