தமிழகத்தில் கடந்த 42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

 
கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு! கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு!

தமிழகத்தில் கடந்த 42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Dengue Mosquito,டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச்சாறு மட்டும் போதும்.  உண்மையா.. கட்டுக்கதையா? - myths and facts about dengue fever in tamil -  Samayam Tamil

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏடிஎஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும், இவ்வகை கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். சமீப காலமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடந்த மே மாதம் 31ம் தேதி வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 4834 ஆக இருந்தது. கடந்த 42 நாட்களில் டெங்கு காய்ச்சல் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 12-ம் தேதி வரை தமிழகத்தில் 5,554 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் கட்டுப்படுத்தும்  வழிகள்....!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.