கணவர் இறந்த அதிர்ச்சியில், மனைவி மயங்கி விழுந்து பலி... தென்காசி அருகே சோகம்!

 
dead

தென்காசி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(67). விவசாயி. இவரது மனைவி களஞ்சியம்(62).  களஞ்சியத்திற்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவர் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார்.

tenkasi ttn
கணவர் மீது அதிக அன்பு வைத்திருந்த களஞ்சியம், அவர் உயிரிழந்ததை அறிந்து கதறி அழுதார். அப்போது, அதிர்ச்சியில் திடீரென நாராயணன் உடலின் மீது மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, களஞ்சியம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இருவரது உடல்களுக்கும் நேற்று ஒன்றாக இறுதிச்சடங்குகள் மேற்கொண்டனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.