தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு

 
tn

தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவிலான திறன் பயிற்சியையும் – வேலைவாய்ப்புகளை பெறவும் கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் – இளம்பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகின்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் சென்னை நந்தனத்தில் ரூ.8.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்புக்குரிய அலுவலகத்தை, இன்று திறந்து வைத்தோம்.

tn

நம் முதலமைச்சர் அவர்களின் கனவுத்திட்டங்களில் முதன்மையான திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம் நடத்தப்பட்ட திறன் பயிற்சியின் மூலம் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 25 இளைஞர்களுக்கான பணி நியமனக் கடிதங்களை இன்று வழங்கி வாழ்த்தினோம்.

இந்த நிகழ்வின் போது, இங்கிலாந்தின் துர்காம் பல்கலைக்கழகம் மூலம் Artificial Intelligence தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – British Council இடையேயும், பயிற்சி – வேலைவாய்ப்பை உருவாக்க, Tech mahindra, oracle நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும், மாவட்ட அளவிலான திறன்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றிய அளவிலான திறன் பயிற்சிகளையும் இன்று தொடங்கி வைத்தோம். 



தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவிலான திறன் பயிற்சியையும் – வேலைவாய்ப்புகளை பெறவும் கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று உரையாற்றினோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.