கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.23.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், திருமண மண்டபம் திறப்பு!!

 
tn

கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.23.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், ஏலகளங்கள், ஆய்வுக்கூடம், சங்கக் கட்டடம், திருமண மண்டபம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.11.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் 23.35 கோடி ரூபாய் செலவில் திருச்செங்கோடு, ஈரோடு, இராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டடம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

stalin

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், உறுப்பினர்கள் விளைவிக்கும் வேளாண் விளைப்பொருட்களை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்திட ஏற்பாடு செய்தல், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை விநியோகித்தல், விளைப்பொருட்களின் மீது தானிய ஈட்டுக் கடன் வழங்குதல், வேளாண் விளைப்பொருட்களைப் பதப்படுத்தி மதிப்புக் கூட்டும் பணியினை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

stalin


வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில், விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விரைவாகவும், எளிதாகவும் சரியான எடையில், நியாயமான விலையில் விற்பனை செய்ய ஏதுவாக மின்னணு வர்த்தகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்திடும் வகையிலும், சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையிலும், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 3.26 கோடி ரூபாய் செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 6.93 கோடி ரூபாய் செலவில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம் மற்றும் ஆய்வுக்கூடம், இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 3.26 கோடி ரூபாய் செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 5.63 கோடி ரூபாய் மதிப்பில் 2,000 மற்றும் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரு கிடங்குகள் மற்றும் ஏலகளம்; நகர்வாழ் அடித்தட்டு மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, சிந்தாதிரிப்பேட்டை நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 2,306 சதுர அடி பரப்பளவில் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம்; பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மறைமலைநகரில், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 16,000 சதுர அடி பரப்பளவில் 3.52 கோடி ரூபாய் செலவில் சங்கத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு திருமண மண்டபம் என மொத்தம் 23.35 கோடி ரூபாய் செலவில் கூட்டுறவுத் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்தார்.