பன்னாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.97 கோடி உயரிய ஊக்கத்தொகை

 
tn

தேசிய, பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.96 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (12.7.2023) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 90 வீரர் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 5 கோடியே 96 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 9 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

stalin

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சார்ந்த திரு. எஸ். ரோஹித் கிருஷ்ணா அவர்களுக்கு 3 இலட்சம் ரூபாயும், 24.10.2022 முதல் 30.10.2022 வரை ஸ்பெயின் நாட்டின், சாண்டாண்டரில் நடைபெற்ற BWF ஜூனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னையை சார்ந்த திரு. எஸ். சங்கர் முத்துசாமி அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாயும், 18.12.2019 முதல் 23.12.2019 வரை ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற 57-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 21 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 79 இலட்சம் ரூபாயும்;

stalin

2021-2022ஆம் ஆண்டு நடைபெற்ற சப்-ஜுனியர், ஜூனியர் மற்றும் சீனியர் தேசிய அளவிலான சாப்ட்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 56 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், 1.11.2022 முதல் 6.11.2022 வரை ஜப்பான் நாட்டின், டோக்கியோவில் நடைபெற்றுள்ள BWF பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 55 இலட்சம் ரூபாயும், 26.10.2022 முதல் 3.11.2022 வரை புது தில்லியில் நடைபெற்ற கான்டிடெனன்டல் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 விளையாட்டு வீரர்களுக்கு 15 இலட்சம் ரூபாயும், 30.11.2021 முதல் 4.12.2021 வரை மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற 20-வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. வேலன் செந்தில்குமார் மற்றும் திரு. சவுரவ்கோசல் ஆகிய இருவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாயும், பெண்கள் குழுப்பேட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற செல்வி. ஜோஷனா சின்னப்பா, செல்வி. சுனைனா குருவில்லா மற்றும் அபராஜிதா பாலமுருகன் ஆகிய மூவருக்கும் தலா 5 இலட்சம் ரூபாயும்;

என மொத்தம் 5 கோடியே 96 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 90 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 9 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.