மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் வருமான வரித்துறை சோதனை!

 
mettur

மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ,நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்களை சப்ளை செய்து வரும் நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.  வரி ஏய்ப்பு  புகாரில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மேட்டூர் அனல்மின் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள்,  ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை, தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.