செம்பரம்பாக்கம் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

 
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து படிப்படியாக 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

 செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு..

தொடர் கனமழையின் காரணமாக திருப்பெரும்புதூர், நேமம்  மற்றும் செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருகிறது. இதனால்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்ந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு  3000  கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில். தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக உயர்ந்து இருப்பதால் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவை படிப்படியாக அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 500 கன அடி வீதம் பகல் 1மணி முதல் மாலை 6:00 வரை என்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக படிப்படியாக  உபரி நீர் திறக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.