சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு.. சென்னையில் மட்டும்..!

 
police

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நாளை மறுநாள் ( ஆகஸ்ட் 15-ந்தேதி) 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியேற்று உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தன்று நடைபெறும் அணிவகுப்புக்கான ஒத்திகையும் இன்று காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதனிடையே, 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு , அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படிருக்கின்றனர்.  

தேசியக்கொடி

பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலயங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் தீவிர  தீவிர பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நகரின் முக்கிய சாலைகளில்   தடுப்புகள் அமைத்து, காவலர்கள்  தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீஸார் உள்பட தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.