இந்திரா காந்தி 39-வது ஆண்டு நினைவு தினம் - கே.எஸ்.அழகிரி , திருநாவுக்கரசர் அஞ்சலி

 
tn

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தி அவர்களின் 39-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

tn

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் MP, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு துரை சந்திரசேகர் MLA தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி, துணை அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

th

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. எம்.எஸ். திரவியம், திரு. சிவ ராஜசேகரன், திரு. ஜெ. டில்லிபாபு, திரு. எம்.பி. ரஞ்சன்குமார், திரு. அடையாறு த. துரை, திரு. எம்.ஏ. முத்தழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.