தமிழ்நாட்டில் தொழிற்புரட்சி நடந்து வருகிறது : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

 
stalin

தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்ற அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் Capitaland - Radial IT Park சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார்.இந்நிலையில் பல்லாவரத்தில் சர்வதேச தொழில் நுட்ப பூங்கா திறப்பு விழாவில் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது, " தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி நடந்து வருகிறது.  

stalin

தமிழ்நாட்டில் 9 இடங்களில் நியோ  டைட்டில் பார்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  5 மில்லியன் சதுர அடியில் தொழில் பூங்காவை ரேடியல் ஐடி பார்க் நிறுவனம் அமைத்து வருகிறது . தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்தவரும் நிறுவனங்களுக்கு நன்றி. 2024 ஜனவரி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த உள்ளோம். தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்ற அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உற்பத்தி துறையில் தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்குகிறது" என்றார்.