திமுகவினரின் அகங்காரமான பேச்சுக்கள் - அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்

 
Annamalai

வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

velu

மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்  எ.வ.வேலு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.  அப்போது பேசிய அவர்,  முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்பட்டார்.  தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி எங்கள் பேருந்து என மக்கள் அழைக்க காரணமாக இருந்தார்.  பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக குடிநீர் நல வாரியம் அமைத்தார்.  கோவில் கருவறைக்குள் நம்மவர்களின் நுழைய அனுமதிக்கவில்லை என்பதால்,  அனைத்து சமூகத்தினரும்  அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.  திராவிடத்தையும்,  ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது.  காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல;  காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள். தென் மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது.  மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை என்றார்.

Annamalai

இதுக்குறித்து தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் , "“பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் திரு ஆர்எஸ் பாரதி அவர்கள். 

"சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை" என்கிறார் அமைச்சர் திரு எவ வேலு அவர்கள். 



மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. 

தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை,  தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.