மதுரை ரயில் விபத்து - தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை

 
tn

மதுரை ரயில் விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.  

tn

இந்த நிலையில், மதுரை ரயில் விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட போது அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர்கள் 5 பேரையும் ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர்.  பிடிபட்ட 5 பேரும் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் முன் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.