இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் பாதிப்பு!

 
ISRO Somnath

புற்று நோயில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சந்திரயான் -3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்தநாளில் உடலில் சில பிரச்சினைகள் இருந்ததை உணர்ந்தேன். கடந்த ஆண்டு செப்டம்பர். 2ம் தேதி எனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

மருத்துவர்கள் பரிந்துரை படி கீமோதெரபி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். சிகிச்சை எடுத்த 5வது நாளே நான் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டேன்.
கீமோதெரபி அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமாக உள்ளேன். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன், தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன் என இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.