மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை! வெளியான அதிர்ச்சி காரணம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். பணியில் சேர்ந்து இரண்டு மாதமான நிலையில் பணிச்சுமை காரணமாக வீட்டில் புலம்பிய நிலையில் சம்பவம் நடைபெற்றுள்ளது.

குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி தாக்கு(39). மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் . இன்று காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டவர் ஜிஎஸ்டி சாலை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மேல் சென்றவர் திடீரென பைக்கை ஓர ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் பாலாஜியின் தலை மற்றும் முகம், இடுப்பு ஆகிய பகுதிகளில் எலும்புகள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டு, மயங்கி கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்தவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி தான் பணிக்கு சேர்ந்து ள்ளார். மேலும் சவகிடங்கில் மகன் சடலத்தை பார்த்த தந்தை சந்திரசேகர் மகன் பணி சுமை காரணமாக வீட்டில் புலம்பியதாகவும், லேப்டாப் கொடு என சொன்ன நிர்வாகம் மீண்டும் விடுவிக்க தாமதம் ஏற்படுத்தி கடும் மன உலைச்சல் ஏற்படுத்தியதே சாவுக்கு காரணம் என மன வேதனையில் தெரிவித்தார். உயிரிழந்த பாலாஜிக்கு மனைவி, ஒரு மகள் உள்ளார்.


