துரோகம் செய்த ஈபிஎஸ் தான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் - தினகரன் பேட்டி!!

 
ttv dhinakaran

 மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமி தான் உள்ளார் என்று தினகரன் சாடியுள்ளார்.

ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்விப்புரட்சியை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஏழைப்பங்காளராக, சாமானிய மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று . அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

tn

சென்னை அண்ணாசாலையில் உள்ள, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்த போது, "எனக்கும், சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தான் உள்ளனர். 

TTV Dhinakaran

கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவோம்; கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடைபெறும் போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு.DMK Files 2-ஐ  அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.