தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
rain

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

rain

நாளை தூத்துக்குடி ,கன்னியாகுமரி ,தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் . ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற 2-ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.