விஜய்யை பார்க்க விபரீத செயல்...தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர்..!!

 
Q Q

நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று தேர்தல் பரப்புரைக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார் தவெக தலைவர் விஜய்.

 

விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெக தொண்டர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

 

இன்று காலை போலி அடையாள அட்டையுடன் திருச்சி விமான நிலையத்திற்குள் தவெக தொண்டர் புகுந்துள்ளார்.

அவரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். பின், விஜய்யை பார்ப்பதற்காக இப்படி செய்ததாக அவர் கூறியதை அடுத்து, கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டார்.