மாயமில்லை.. மந்திரமில்லை.. தானாகவே இயங்கும் ஸ்கூட்டர்.. அறிமுகப்படுத்திய ஓலா..!

 
1

ஓலா எலக்ட்ரிக் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் புகழைப் பெற்றுள்ளன. இ-ஸ்கூட்டர் பிரிவில் ஆரம்பம் முதலே களமிறங்கி கொடிக்கட்டிப் பறக்கும் நிறுவனமாகவும் உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை எண்ணிக்கையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், 2024 மார்ச் மாதம் 53,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று, தொடர்ந்து ஐந்தாவது மாதமாக புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. 


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ ஓர் பதிவைப் போட்டிருந்தார். அந்த பதிவில் அவர் கூறியிருந்ததாவது, வருகின்ற திங்கள்கிழமை புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் அறிவித்திருக்கின்றார்.அவர் ஓர் புதிய தயாரிப்பு என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கின்றார். எனவே, ஓலா என்ன தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பதே பலரின் சந்தேகமாக அமைந்து இருக்கின்றது.

இந்நிலையில், இந்நிலையில்  'ஓலா சோலோ' என புதுமையான மின்சார ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.சோலோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழில்நுட்பம் நிரம்பியுள்ளது, அதிநவீன AI திறன்களை ஒருங்கிணைத்து, புத்திசாலித்தனமான, பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான சவாரி, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிப், LMA09000 மூலம் இயக்கப்படுகிறது, சோலோ தெருக்களில் செல்ல செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. 

"ஓலா சோலோ - இந்தியாவின் முதல் தன்னாட்சி மின்சார ஸ்கூட்டர்.சோலோ ஒரு முழு தன்னாட்சி, AI இயக்கப்பட்ட மற்றும் போக்குவரத்து ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஆகும்.


Ola Electric இன் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் தனது X கணக்கில் புதிய ஸ்கூட்டரின் புதுப்பிப்பைப் பகிர்ந்துகொண்டார், "'Ola Solo - இந்தியாவின் முதல் தன்னாட்சி மின்சார ஸ்கூட்டரை வழங்குகிறோம்.' சோலோ ஒரு முழு தன்னாட்சி, AI இயக்கப்பட்ட மற்றும் டிராஃபிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர். சவாரி செய்யுங்கள் அல்லது உங்கள் சொந்த சோலோவை ஓட்டுங்கள்.