பொன்முடி வழக்கில் தன்னை இணைக்க கோரிய ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி

 
jayakumar ponmudi

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி  செய்யப்பட்டுள்ளது. 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொன்முடி வழக்கில் தன்னையும் இனைக்குமாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். 

ponmudi

இந்த நிலையில், பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என ஜெயக்குமார் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த் அநிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.