ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெயக்குமார்

 
jayakumar

அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
 கூறியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கோடநாடு வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:  கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒரு வருடம் நீதிமன்றம் செயல்படாமல் இருந்ததால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த வழக்கு குறித்து மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடந்தது. அவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் 90 சதவீதம் விசாரணை நிறைவு என கூறினார். ஆனால், திடீரென வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏன் அவரை விட குறைவான பணியில் உள்ளவரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது?  குற்றவாளிகளுக்கு ஆதரவாகை தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர்கள் வாதிட்டு உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் தரலாம் என கூறியுள்ளனர். இதனை முதலமைச்சர் சட்டசபையில் நிரூபித்து உள்ளார்.  

தொடர்ந்து அவரிடம், ஓ.பன்னீர்செல்வம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இதுகுறித்து பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் கிடையாது. அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.