மதுரை அதிமுக மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் - ஜெயக்குமார் நம்பிக்கை

 
jayakumar

மதுரை அதிமுக மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டில் பங்கேற்க செல்லும் நிர்வாகிகள் சென்னை ராயபுரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "இந்திய திருநாடே திரும்பிப் பார்க்கின்ற வகையில் அதிமுக மாநாடு அமையும்;முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்தது, கட்சி சிதறுண்டது, கட்சியே இல்லை என கூறியதற்கு பேரடியாக இந்த மாநாடு அமையும்;மதுரை எழுச்சி மாநாடு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்;அதிமுகவின் இந்த மாநாடு போல கடந்த காலத்தில் யாரும் மாநாடு நடத்தியதில்லை;  எதிர்காலத்திலும் யாரும் நடத்தப் போவதும் இல்லை” என்றார்.

jayakumar

தொடர்ந்து பேசிய அவர் , "கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் நேரத்தில் பேசி மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் பேசுவதற்கு திமுகவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. 17 ஆண்டுகள் மத்திய அரசில் இருந்த திமுக ஏன் கட்சி தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.