தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு - முகேஷ் அம்பானி தகவல்

 
tn

தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக  ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். 

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.  இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றுள்ளன.  மேலும் 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ள இயலாததால் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ பதிவில் உரையாற்றினார். 

tn

முகேஷ் அம்பானி பேசியதாவது: தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவோம்.   3.5 கோடி பயனீட்டாளர்களுக்கு மின்னணு புரட்சியை கொண்டு சேர்த்துள்ளோம். உலகில் அதிவிரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜியோ நிறுவனம். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்திலும் ரிலையன்ஸ் நிறுவன திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது என கூரினார்.