செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கு - நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

 
senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.  இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதன் பின்னர் காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை  சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துவர்களின்  கண்காணிப்பில் உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நிஷா பானு , பரத சக்கரவர்த்தி ஆகியோர்  விசாரித்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர். 

high court

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை வழங்கினர். அதில்,  அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என்று நீதிபதி பரத சக்ரவர்த்தியும் மாறுபட்ட தீர்ப்பை கூறியுள்ளனர். இதன் காரணமாக ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை 3வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைத்துள்ளனர்.