காதலன் ஏமாற்றிவிட்டதாக ஜுலி போலீசில் கண்ணீர்
யார் இந்த வீர தமிழச்சி என்று எல்லோரும் கேட்கும்படி மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முழக்கம் எழுப்பி, ஆடி பாடி அமர்க்களப்படுத்தியவர் ஜூலி. அந்த பிரபலத்தை வைத்து தான் பிக் பாஸ் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் சினிமாக்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தன்னை காதலித்து விட்டு ஏமாற்றி விட்டதாக சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது பரபரப்பு புகார் அளித்திருக்கிறார் ஜூலி.
மனீஷ் என்பவர் தன்னை 4 வருடங்கள் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தன்னிடம் இருந்த நகை பணம் பல்சர் பைக் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கிவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த புகாரில் கூறியிருக்கிறார் ஜூலி.
நான்கு வருடங்களாக காதலித்து வந்தபோது, காதலன் மனீஷ்க்க்கு 2.30 லட்சம் செலவு செய்து இருப்பதாக ஜூலி புகாரில் தெரிவித்திருக்கிறார். தன்னை 4 வருடங்களாக காதலிக்கு வந்துவிட்டு, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார்.
நண்பர்களுன் காரில் பாய்ந்த ஜூலி, அதை தட்டிக்கேட்ட தலைமைக்காவலரை அடிக்க பாய்ந்ததாக முன்னர் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் காதலன் மீது புகார் கொடுத்திருக்கிறார்.