சென்னை விரைவில் மீள வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன் - அண்ணாமலை

 
Annamalai

சென்னை விரைவில் மீள வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். 


இந்த நிலையில், மிக்ஜம் புயலால் பாதிப்புக்குள்ளான சென்னை பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் ராஜீவ் கோயுடன் சேர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிவாரணை பொருட்களை வழங்கினார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், சென்னை முழுவதுமே, பாஜக சகோதர சகோதரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பதை காண முடிகிறது. அனைவரின் உதவியுடன், இயல்பு நிலை முழுமையாக திரும்பி, சென்னை விரைவில் மீள வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.