கலைஞர் நினைவிடம் பிப்.26ல் திறப்பு

 
stalin

கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 26ஆம் தேதி திறந்துவைக்கிறார் .

karunanidhi

சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை பிப்.26ம் தேதி திறந்து வைக்கிறார் முலதமைச்சர் மு.க.ஸ்டாலின். அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் சாதனைகளை கூறும் நினைவிட முகப்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

pen
கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கலைஞர் நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளும் நடைப்பெற்று வந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.