முதல்வர் முன்னிலையில் கமல்ஹாசன், திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

 
முதல்வர் முன்னிலையில் கமல்ஹாசன், திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..  முதல்வர் முன்னிலையில் கமல்ஹாசன், திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.. 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுக வேட்பாளர்கள் மாநிலங்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தமிழகத்தில் இருந்து ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  ஆறு இடங்களுக்கான தேர்தலில், தி.மு.க மூன்றிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் போட்டியிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தி.மு.க சார்பில், தற்போதைய எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.  இன்று முதலமைச்சர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் இவர்கள்  வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

முதல்வர் முன்னிலையில் கமல்ஹாசன், திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.. 

அதன்படி,  எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  உறுதிமொழியேற்று அனைவரும் வேட்புமனுவில் கையெழுத்திட்டு மனுவை தாக்கல் செய்தனர். மொத்தமே 6 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால் அனைவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.   இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி ஆகியோர் உடன் இருந்தனர்.