கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு - சசிகலா வேதனை!!
கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் குருமகாசன்னிதானம், ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல்நலக்குறைவால் சிவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
காளையார் கோவில் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் என ஆண்டுதோறும் குரு பூஜைகளை முன்னின்று செய்தவர்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவித்த நிகழ்வின் போது முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் குருமகாசன்னிதானம், ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல்நலக்குறைவால் சிவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
— V K Sasikala (@AmmavinVazhi) March 12, 2024
காளையார் கோவில் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் என ஆண்டுதோறும் குரு பூஜைகளை…
கோவை காமாட்சிபுரி ஆதீனம் அவர்களை இழந்துவாடும் பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.