காஞ்சிபுரம் ரவுடி சங்கரின் ரூ.25 கோடி சொத்துகள் முடக்கம்!
காஞ்சிபுரம் ரவுடி சங்கரின் ரூ.25 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருபவர் பிரபல ரவுடி சங்கர். சங்கர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் , அவர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி ஆணையர் தலைமையில் சென்ற காவல்துறையினர் ரவுடி சங்கரை நேற்று துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடமிருந்து பட்டாக்கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் ரவுடி PPGD சங்கருக்கு சொந்தமான ரூ.25 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ரவுடி சங்கர் மற்றும் அவரது பினாமிகளின் 79 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ரவுடி சங்கரின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சங்கர் மீது 15 குற்ற வழக்குகள் உள்ள நிலையில் 3 குற்றப் பத்திரிகைகளை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.