கனிமொழி பயணித்த விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு
தி.மு.க எம்.பி கனிமொழி ரஷ்யாவுக்கு பயணித்த விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும்விதமாக சசி தரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இந்த 7 குழுக்களில் 59 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 51 பேர் எம்பிக்கள், ஆவர். 8 பேர் வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆவர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 31 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்பிக்கள் 7 குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி ரஷ்யாவுக்கு பயணித்த விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பின் பத்திரமாக தரை இறங்கியது.


