கனிமொழியின் கணவருக்கு அப்பல்லோவில் தொடர் சிகிச்சை

 
க்

கனிமொழி எம்பியின் கணவர் அரவிந்தன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   நுரையீரல் தொற்று காரணமாக அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்

 கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வந்துள்ளார்.  அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது காரணமாக கடந்த நான்காம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு நடந்த தொடர் பரிசோதனைகள் மூலம் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது அதற்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.

இதனால் கனிமொழி சிங்கப்பூர் சென்றிருந்தார்.  அரவிந்தனுக்கு கொஞ்சம் உடல்நிலை சீரானதை அடுத்து இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னை அழைத்து வரப்பட்டிருந்தார்.

 சென்னை வந்ததும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.  முதல்வர் ஸ்டாலின் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அரவிந்தனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து குறித்தும் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

சிகிச்சைக்கு பின்னர் ஓரிரு நாளில் அரவிந்தன் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.