ஜெயலலிதா வலிமையான தலைவர் - நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு

 
Kanimozhi

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசியலுக்கு பயன்படுத்துகிறது பாஜக என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.   128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது. தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தற்போதைய மகளிர் இடஒதுக்கீடு நிபந்தனைகளை கொண்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசியலுக்கு பயன்படுத்துகிறது பாஜக. ஜெயலலிதா, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பெண்களும் தைரியமானவர்கள்.  ஏன் பெண்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதில்லையா?, போர்களில் பெண்கள் கலந்து கொண்டதில்லையா?  பெண்கள் தைரியமானவர்கள்.  இந்திரா காந்தி தைரியமானவர் இல்லையா?  ஜெயலலிதா வலிமையான தலைவர் என்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இவ்வாறு கூறினார்.