கர்மவீரர் காமராசர் நினைவு நாள் - ஓபிஎஸ் மரியாதை!!
கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
காமராசர் இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, விடுதலைப் பெற்ற இந்திய நாடு வேளாண் துறை, தொழில் துறை, கல்வி போன்றவற்றில் உயர பாடுபட்ட கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். தொண்டு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய ஏழை பங்காளர்… pic.twitter.com/XGd4FQthJB
— O Panneerselvam (@OfficeOfOPS) October 2, 2023
இந்திய நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, விடுதலைப் பெற்ற இந்திய நாடு வேளாண் துறை, தொழில் துறை, கல்வி போன்றவற்றில் உயர பாடுபட்ட கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். தொண்டு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய ஏழை பங்காளர்… pic.twitter.com/XGd4FQthJB
— O Panneerselvam (@OfficeOfOPS) October 2, 2023
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "இந்திய நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, விடுதலைப் பெற்ற இந்திய நாடு வேளாண் துறை, தொழில் துறை, கல்வி போன்றவற்றில் உயர பாடுபட்ட கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். தொண்டு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய ஏழை பங்காளர் கர்மவீரர் காமராசர் அவர்களின் அர்ப்பணிப்பினை நாம் என்றென்றும் நினைவுகூர்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.