உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்

 
duraimurugan

உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

duraimurugan

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், " காவிரியில் உரிய நீரை திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். கூட்டாட்சி தத்துவத்தில் உயர்ந்து நிற்பது உச்சநீதிமன்றம் . அதன் உத்தரவை ஓர் அரசாங்கத்தின் நடத்துபவர்கள் புறக்கணிக்க முடியாது . காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. 

duraimurugan

 காவிரியில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கு  கர்நாடகா அரசு தர வேண்டும் .  உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. எனவே  உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் தற்போது கர்நாடக அரசு இருக்கிறது .காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில் சட்டரீதியாக சென்று கொண்டிருக்கும்போது , பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு அவசியம் இல்லை" என்றார்.