கார்த்திகை தீபத்திருநாள் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து!!

 
rangasamy

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து கூறியுள்ளார். 

Karthigai Deepam

இதுதொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீபத்திருநாளும் ஒன்றாகும். இந்நாளில், இருள் மற்றும் தீமைகளை நீக்கும் முடிவில்லாத ஒளியின் ஆதாரமான சிவபெருமானின் அருளாசியைப் பெற வீடுகளிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.

tn

தீபத்தின் ஒளி எப்படி அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ, அதுபோல் நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும். கார்த்திகை தீபத்தின் ஒளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டட்டும் என்று கூறி அனைவருக்கும் கார்த்திகை தீப தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.