கரும்பு விவசாயி சின்னம் - அவசர வழக்காக இன்று காலை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

 
tn

 கரும்பு விவசாயி சின்னம் வழங்க உத்தரவிடக் கோரி, நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக இன்று காலை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

tn

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அங்கிகரிக்கப்பட்ட தேர்தல் கட்சிகளுக்கு அந்த கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கிகரிக்கப்படாத மாநில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு வழங்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின் படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதால் மனுதாரர் கூறும் படி சின்னம் ஒதுக்குவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதை  நீதிமன்றம் உறுதி செய்ததோடு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார்.

supreme court

இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னம் வழங்க உத்தரவிடக் கோரி, நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக இன்று காலை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். சின்னம் தொடர்பான நாம் தமிழர் கட்சியின் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.