கேரளாவில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு...8 தனிப்படைகள் அமைப்பு - டிஜிபி பரபரப்பு பேட்டி

 
kerala dgp kerala dgp

கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என கேரள போலீசார் உறுதி செய்துள்ளனர். 

கேரளாவின் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் இன்று வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தது. ஞாயிற்று கிழமையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், திடீரென அந்த வழிபாட்டு தளத்தில் குண்டுவெடித்தது. சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சப்தத்துடன் 3 குண்டுகள் வெடித்துள்ளன. எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடித்தது என்ன மாதிரியான குண்டுகள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

bomb blast

இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கேரள டிஜிபி கூறியதாவது: கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என உறுதி செய்யபட்டுள்ளது. தொடர்ச்சியாக 3 குண்டுகள் வெடித்துள்ளது. குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை  நடத்தி வருகின்றனர். இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. இவ்வாறு கூறினார்.