கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஜூலை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு வழக்கு ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் ஆகும். இந்த வழக்கை முதலில் நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து வந்த நிலையில் பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது.
சிபிசிஐடி தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணையின் போது விசாரித்து நீதிபதி நாராயணன் வழக்கை (ஜூன் 23)இன்று ஒத்தி வைத்தார். அதன்படி கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம். புலன் விசாரணைக்காக வெளிமாநிலம் செல்ல உள்ளதால் கால அவகாசம் கோரியது சிபிசிஐடி. இதன் காரணமாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகை நீதிமன்றம் ஜூலை 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.