"கு.க.செல்வம் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்" - ஓபிஎஸ் இரங்கல்

 
ops

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மறைவையொட்டி ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆயிரம்விளக்கு சட்டப் பேரவை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட  பணியாற்றிய திரு. கு.க. செல்வம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத்  துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். 



திரு. கு.க. செல்வம் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.