மிக்ஜாம் புயல் - ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

 
tn

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ₹5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (25.12.2023) முகாம் அலுவலகத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

stalin

இச்சந்திப்பின்போது, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் எதிர்பாராத பெரும் தாக்குதலை நிகழ்த்தியபோது, அந்த சவால்களை எதிர்கெண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் இமைப்பொழுதும் துஞ்சாது ஓய்வின்றி சுற்றிச்சுழன்று பணியாற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, பாராட்டினார்.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் இச்சந்திப்பின்போது உடனிருந்தார்.