சுவாமி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகளை ஏற்று நல்வழிப்படுவோம் - எல்.முருகன்!
சுவாமி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருடைய போதனைகளை மானசீகமாக ஏற்று நல்வழிப்படுவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாரதத்தின் தலைசிறந்த ஆன்மீகவாதி, சுவாமி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். உலகம் போற்றும் ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஶ்ரீவிவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களுமே இறைவனை அடைவதற்கான வழியையே போதிக்கின்றன என்பதை, தன்னுடைய அனுபவங்கள் மூலம் உலகிற்கு உணர்த்தியவர்.
பாரதத்தின் தலைசிறந்த ஆன்மீகவாதி, சுவாமி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். உலகம் போற்றும் ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஶ்ரீவிவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களுமே இறைவனை அடைவதற்கான வழியையே போதிக்கின்றன என்பதை, தன்னுடைய அனுபவங்கள் மூலம் உலகிற்கு உணர்த்தியவர்.
— Dr.L.Murugan (@Murugan_MoS) February 18, 2024
இளைய சமுதாயத்தை ஆன்மீகத்தின்… pic.twitter.com/ZFVr6sws73
இளைய சமுதாயத்தை ஆன்மீகத்தின் வழி நல்வழிப்படுத்தும் நோக்கோடு இவர் ஆற்றிய போதனைகள் தான், நமக்கெல்லாம் ஶ்ரீவிவேகானந்தர் எனும் மகானை கொடுத்தது. இன்றும் தேசத்தின் பல்வேறு நகரங்களில், சுவாமிகளின் பெயரில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களே, சுவாமிகளுடைய ஆழமான கருத்துகளுக்கு சான்றாகி நிற்கிறது. சுவாமி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருடைய போதனைகளை மானசீகமாக ஏற்று நல்வழிப்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.