#Election2024 பாஜக தொண்டர்கள் மீது தடியடி; நீலகிரியில் போராட்டம்!

 
Ooty

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகின்றார்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி வருகின்ற 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இன்று நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் L.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். 
Murugan
கட்டுக்கடங்காத கூட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டத்தினை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினை கலைத்தனர்.
இதனால் காவல்துறையினரை கண்டித்து பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி உரையாற்றிய பாஜக தலைவர் அண்ணாமலை, நீலகிரி எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
அண்ணாமலையிடம் பேசிய நீலகிரி எஸ்.பி தனது வருத்தத்தை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.