‘மனங்களில் மகிழ்வு பெருக’ - தலைவர்கள் தீபாவளி வாழ்த்து..

 
‘மனங்களில் மகிழ்வு பெருக’ - தலைவர்கள் தீபாவளி வாழ்த்து..


 தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு  வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதர்மங்கள் அழிந்து தர்மங்கள் தழைத்திட இருள் அகன்று வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் தீபாவளியாக இந்த வருடமும் அமைய வேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.” என்று கூறியுள்ளார்.  

தீபாவளி

இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், “எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க. ஒளியினால் இருள் அகல்க. மனங்களில் மகிழ்வு பெருகுக. என் தீபாவளி வாழ்த்து.” என வழக்கம் போல் தனது தனி பாணியில் வாழ்த்து கூறியிருக்கிறார்.  

‘மனங்களில் மகிழ்வு பெருக’ - தலைவர்கள் தீபாவளி வாழ்த்து..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் தீப ஒளித் திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரும் வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.